top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


ஜல்லிக்கட்டு - அமெரிக்கன் கல்லூரி விழா
27-03-2026 அன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற, 'ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி' நூல் அறிமுக விழா பல வகைகளில் எனக்கு முக்கியமானது. அன்றைய தினம், நூலை அறிமுகப்படுத்தி பேசிய சீனிவாச ராமநுஜம் எனது மதிப்பிற்குரியவர். அந்நூலின் மைய கருத்தாக்கமான 'காலிக்குறிப்பானை' விளக்கும் வகையில் அமைந்த அவரது பேச்சு கூர்ந்து கவனிக்கத்தக்கது. பிராமணம் என்ற காலிக்குறிப்பானை தமிழ்ச் சமூகம் எவ்வாறு உருவாக்கியிருக்க முடியும் என்ற யோசனை என் நூலின் அடியாழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.
Apr 81 min read


உங்கள் புத்தகங்களுக்கு நன்றி - ஒரு கடிதம்
அன்புள்ள தர்மராஜ் அவர்களுக்கு, உண்மையில் நான் உங்களிடம் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான்: உங்கள் புத்தகங்களுக்கு நன்றி. உங்கள் தாய்மொழி என்ற ஏமாற்று வேலை கட்டுரையில், அந்த சிறுமி "மாமா செமையா இருந்தது சான்ஸே இல்லை" என்று சொன்னபோது, அந்த சிறுமி எப்படி உணர்ந்தாள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் திரும்பத் திரும்ப இந்த கடிதத்தில் சொல்ல விரும்புவது எல்லாம் இந்த உணர்ச்சியை தான். ஆனால், ஏனோ இது போதுமானதாக இல்லை. போன வருடம் ஏப்ரல் மாதம் உங்கள் அயோத்திதாசர் புத்தகத்தை வாசிக்க
Apr 820 min read


ஜல்லிக்கட்டு - அஜய் பால் ராவணன் கடிதம்
‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகம் வாசித்தேன். இன்னும் அந்தப் புத்தகத்தை விட்டு வெளி வர முடியாத ஒரு உணர்வு. எனது வெளியும் உள்ளும் கூறு கூறுகளாக பகுக்கப்பட்டது போல உணர்கிறேன். ஏதோ வகையில் நான் அறிந்து கொள்ள விரும்பிய, தெரிந்து கொள்ள யத்தனித்த அனைத்தை பற்றியும் தருமராஜ் ஆய்ந்து எழுதியிருக்கிறார். தமிழ் பண்பாடு குறித்து நான் அடைந்திருந்த பெருமிதம், ஒரு வகையான சுப்பீரியாரிட்டி, வாய்மொழி மீது வைத்திருந்த ஒரு வகையான மோகம், எழுத்தின் / பனுவலின் மீதிருந்த நம்பிக்க
Apr 82 min read


வெகுஜனக் கிளர்ச்சியின் வம்சாவழி
பாலா கருப்பசாமியின் சக்தி நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் நான்கு மணி நேரம் போலச் சென்றது. முடிந்ததும் தான், அய்யய்யோ பதிவு செய்யவில்லையே என்று தோன்றியது. தமிழர்களுக்கு வரலாற்றுணர்வு அறவே கிடையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. நான் பேசும் போது, ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலுக்கு ஆரம்பத்தில் வேறு சில தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டன’ என்று சொன்னேன். அவற்றுள் ஒன்று, வெகுஜனக் கிளர்ச்சியின் வம்சாவழி; இன்னொன்று, தமிழ் வெகுஜன உருவாக்கம். இவ்விரு தலைப்புகளிலும் ஃபூக்க
Apr 82 min read


ஜல்லிக்கட்டு - சாக்ரடீஸ் ஸ்டூடியோ
பேராசிரியர் முரளியின் சாக்ரடிஸ் ஸ்டூடியோவில் வெளியான நேர்காணலைப் பார்த்து விட்டு ஏராளமான அழைப்புகள். ‘ஜல்லிக்கட்டு’ புத்தகத்தின் அடிநாதமாக விளங்கும் வெகுஜனவியம் பற்றியே அந்த ஒரு மணி நேர உரையாடலும் அமைந்திருந்தது. இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாமே என்றே பலரும் சொன்னார்கள். ஆனால், யூ ட்யூப் உரையாடல்கள் ஒரு மணி நேரத்திற்குள் இருப்பதே உத்தமம் என்றே நான் நினைக்கிறேன். பேராசிரியர் முரளியும் அந்தக் கருத்தில் உறுதியாக இருந்தார். அவருடைய காணொளிகளுக்கு ஒரு லட்சம் பார்வையாளர்கள
Apr 82 min read


ஜல்லிக்கட்டு - சக்தி நூலக வாசகர் சந்திப்பு
பாலா கருப்பசாமியின் சக்தி நூலகத்தில் நடந்த வாசகர் சந்திப்பு மனதுக்கு நிறைவாக இருந்தது. ‘ஒரு புத்தகத்தை எழுதி முடித்து, அதன் அச்சு வடிவத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பரவசத்தை நீங்கள் முழுமையாக வெளிப்படுத்துகிறீர்கள். அது என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்ற பாலா கருப்பசாமியின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. எழுத்தாளன் தன் புத்தகங்கள் மீது பற்றற்றவனாக இருக்க வேண்டும் என்று யார் எந்த காலத்தில் சொல்லி வைத்தார்கள் என்று தெரியவில்லை; இதுவொரு சாபம் போல தமிழில் தொடர்ந்து வ
Apr 81 min read


ஜல்லிக்கட்டு - இமாம் அத்னன் பதிவு
ஒரு அறிமுகக் குறிப்பு தமிழ் மொழிப்பரப்பில் நீண்டகாலமாக சிறிதும் சளைக்காமல் கள-ஆய்வுகள், கருத்தமைவாக்கம் செய்தல், கோட்பாட்டுப் புரிதல்களுடன் மோதவிட்டுப் பார்த்தல், விமர்சனத்திற்கு உட்படுத்தல் என தனது மொழிற்செயற்பாடுகளை புத்தியிர்ப்புடன் முன்னெடுப்பவர்களில் ஒருவராகவே டி.தருமராஜைப் பார்க்கிறேன். அவருடைய ‘யாதும் காடே யாவரும் மிருகம்’ கட்டுரைத்தொடர் எனது சிந்திப்பு போக்கை திசைதிருப்பிய பிரதிகள். அவரது எழுத்தும் விமர்சனங்களும் இன்னும் fresh ஆக இருப்பதையே நண்பர்களிடம் சொல்லிக் கொள்வ
Apr 82 min read


ஜல்லிக்கட்டு - முத்துவின் பதிவு
டி.தருமராஜ் அனுப்பிக்கொடுத்த அவருடைய நூல் “ஜல்லிக்கட்டு” இன்று கிடைத்தது. தருமராஜின் “யாதும் காடே, யாவரும் மிருகம்” நூலின் பகுதிகளை இணையத்தில் வாசித்தபோது எனக்குப் பிடித்திருந்தது. அந்தப் பகுதிகளைப் பற்றி பத்தொன்பது இருபது வயதுகளில் தருமராஜ் இருந்தபோது அவர் எழுதிய சிறுகதையைப் படித்த நினைவு வந்ததாக நெகிழ்ந்து எழுதியிருந்தேன். மொத்தமாக நூலாகப் படித்தபோது அந்த நூலின் அரசியல் கூர்மையும், அந்தத் தலைப்பு சுட்டுகிற கடும் அவநம்பிக்கையும் என்னைத் திகைக்க வைத்தன. வாழ்க்கையில் சொல்லவொணா
Apr 81 min read
bottom of page












































