top of page

அறிமுகம்
டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.
1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு கணிசமானது.
சமீபத்திய பதிவுகள்


ஜல்லிக்கட்டு - அமெரிக்கன் கல்லூரி விழா
27-03-2026 அன்று அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற, 'ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி' நூல் அறிமுக விழா பல வகைகளில் எனக்கு முக்கியமானது. அன்றைய தினம், நூலை அறிமுகப்படுத்தி பேசிய சீனிவாச ராமநுஜம் எனது மதிப்பிற்குரியவர். அந்நூலின் மைய கருத்தாக்கமான 'காலிக்குறிப்பானை' விளக்கும் வகையில் அமைந்த அவரது பேச்சு கூர்ந்து கவனிக்கத்தக்கது. பிராமணம் என்ற காலிக்குறிப்பானை தமிழ்ச் சமூகம் எவ்வாறு உருவாக்கியிருக்க முடியும் என்ற யோசனை என் நூலின் அடியாழத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்றார்.


உங்கள் புத்தகங்களுக்கு நன்றி - ஒரு கடிதம்
அன்புள்ள தர்மராஜ் அவர்களுக்கு, உண்மையில் நான் உங்களிடம் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான்: உங்கள் புத்தகங்களுக்கு நன்றி. உங்கள் தாய்மொழி என்ற ஏமாற்று வேலை கட்டுரையில், அந்த சிறுமி "மாமா செமையா இருந்தது சான்ஸே இல்லை" என்று சொன்னபோது, அந்த சிறுமி எப்படி உணர்ந்தாள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது. நான் திரும்பத் திரும்ப இந்த கடிதத்தில் சொல்ல விரும்புவது எல்லாம் இந்த உணர்ச்சியை தான். ஆனால், ஏனோ இது போதுமானதாக இல்லை. போன வருடம் ஏப்ரல் மாதம் உங்கள் அயோத்திதாசர் புத்தகத்தை வாசிக்க


ஜல்லிக்கட்டு - அஜய் பால் ராவணன் கடிதம்
‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ புத்தகம் வாசித்தேன். இன்னும் அந்தப் புத்தகத்தை விட்டு வெளி வர முடியாத ஒரு உணர்வு. எனது வெளியும் உள்ளும் கூறு கூறுகளாக பகுக்கப்பட்டது போல உணர்கிறேன். ஏதோ வகையில் நான் அறிந்து கொள்ள விரும்பிய, தெரிந்து கொள்ள யத்தனித்த அனைத்தை பற்றியும் தருமராஜ் ஆய்ந்து எழுதியிருக்கிறார். தமிழ் பண்பாடு குறித்து நான் அடைந்திருந்த பெருமிதம், ஒரு வகையான சுப்பீரியாரிட்டி, வாய்மொழி மீது வைத்திருந்த ஒரு வகையான மோகம், எழுத்தின் / பனுவலின் மீதிருந்த நம்பிக்க
காணொளிகள்
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Share
Facebook
Twitter
Pinterest
Tumblr
Copy Link
Link Copied
Search video...

Now Playing
23:41
வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

Now Playing
14:19
selvendhiran

Now Playing
33:47
T Dharmaraj Speech அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை டி தருமராஜ்
bottom of page
